• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நில மோசடி சம்பந்தமாக லாலு பிரசாத் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

May 16, 2017 தண்டோரா குழு

ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரூ 1000 கோடி அளவுக்கு நில மோசடி வழக்கில் ஈடுப்பட்டுள்ளதாக அவரது வீடு உட்பட 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

லாலு பிரசாத் யாதவ் மகன் எம்.பி. பிசி குப்தாவின் வீட்டிலும், பிற தொழில் அதிபர்கள் வீட்டிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது

லாலு பிரசாத் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பினாமி நிலத்தை சட்டத்துக்கு விரோதமாக மாற்றியது தொடர்பாக சுமார் ரூ. 1000 கோடி அளவில் நடந்து உள்ளதாகவும், வரி ஏய்ப்பு நடந்து உள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

மேலும் லாலு பிரசாத், அவருடைய மகளும்,நாடாளுமன்ற உறுப்பினருமான மிசா பாரதி மற்றும் அவருடைய இரு மகன்களும் ரூ. 1000 கோடி அளவில் நில மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக பா.ஜா.க குற்றம் சாட்டியது. இந்த மோசடி குறித்து மத்திய அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுத்தவிர டெல்லி, குர்கான், ரேவாரி மற்றும் பிற இடங்களில் சில தொழில் அதிபர்கள், ரியல் எஸ்டேட் முகவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க