• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தினகரன் நீதிமன்ற காவல் மே 29ம் தேதி வரை நீட்டிப்பு

May 15, 2017 தண்டோரா குழு

இரட்டை இல்லை சின்னம் தொடர்பான வழக்கில் கைதான தினகரனுக்கு மே 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு.

இரட்டை இலை சின்னத்தை மீட்டு தர லஞ்சம் கொடுத்தாக முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவர் நீதிமன்ற காவலில் சிறை வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது தொடர்ந்து. அவர் டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து டி.டி.வி. தினகரனுக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்திரவிட்டார். அதைப்போல் சுகேஷ் சந்திரசேகருக்கும் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க