• Download mobile app
19 Feb 2026, ThursdayEdition - 3662
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தினகரன் நீதிமன்ற காவல் மே 29ம் தேதி வரை நீட்டிப்பு

May 15, 2017 தண்டோரா குழு

இரட்டை இல்லை சின்னம் தொடர்பான வழக்கில் கைதான தினகரனுக்கு மே 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு.

இரட்டை இலை சின்னத்தை மீட்டு தர லஞ்சம் கொடுத்தாக முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவர் நீதிமன்ற காவலில் சிறை வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது தொடர்ந்து. அவர் டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து டி.டி.வி. தினகரனுக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்திரவிட்டார். அதைப்போல் சுகேஷ் சந்திரசேகருக்கும் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க