• Download mobile app
01 Dec 2025, MondayEdition - 3582
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை கமிஷனராக ஏ கே விசுவநாதன் நியமனம்

May 13, 2017 தண்டோரா குழு

சென்னை மாநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதனை நியமனம் செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஜார்ஜ் ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவரது இடத்தில் கரண் சின்ஹாவை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்திரவிட்டது.

இந்நிலையில், சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதனை நியமனம் செய்து தமிழக அரசு உத்திர விட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த கரண் சின்ஹா சீருடைபணியாளர் தேர்வு வாரியத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஏ கே விஸ்வநாதன் கோவை மாநகர காவல் ஆணையாளர், சென்னை மாநகர கூடுதல் ஆணையர்(சட்டம் ஒழுங்கு) காவல் துறை கூடுதல் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க