• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை நகரில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி

May 13, 2017 தண்டோரா குழு

கோவை டி.வி.எஸ் காலனி வழியாக செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில் அவினாசிலிங்கம் யுனிவர்சிட்டி சிக்கனல் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிகுள்ளாகி வருகின்றனர்.

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் நாள்தோறும் பல லட்சம் வாகனங்கள் செல்கின்றன. இதில் அதிகப்படியாக இருசக்கர வாகனங்கள் காணப்படுகிறது.

இந்நிலையில் அவினாசிலிங்கம் யுனிவர்சிட்டி சிக்கனல் அருகே உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ள காரணத்தினால் இரு சக்கர வாகனம் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் பள்ளி மணாவர்கள், கல்லூரி மாணவிகள் , பொது மக்கள் என அனைத்து தரப்பும் பாதிப்படைந்துள்ளனர்.

சிக்கனல் அருகே உள்ள அந்த பள்ளம் சிக்கனில் காத்துக்கொண்டிருக்கும் வாகன ஒட்டிகளுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. பச்சை சிக்கனல் போட்டவுடன் வேகமாக செல்லும் வாகனங்கள் அந்த பள்ளத்தை பொருட்படுத்தாமல் செல்வதால் சில சமயம் சிலர் கிழே சாலையில் விழுந்து காயம் ஏற்படுகின்றது. மற்றும் சிலருக்கு வாகனம் பள்ளத்தில் செல்லும் போது பழுது ஏற்பட்டு நின்று விடுகிறது. இதனால் பின்னாடி வரும் வாகனங்கள் மோதும் மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனை மாநகராட்சி அதிகாரிகள் சீர் செய்ய வேண்டும் என அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை நகரம் வழியாக செல்லக்கூடிய சாலைகள் பெரும்பாலும் இவ்வாறு இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க