• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரண்மனையில் தீ விபத்து ; 3 லட்சம் ரூபாய் எரிந்து நாசம்

May 13, 2017 தண்டோரா குழு

மைசூர் அரண்மனையின் வடக்கு பகுதியில் உள்ள வாயில் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் ஏ.டி.எம்-யில் உள்ள 3 லட்சம் ரூபாய் தீயில் எரிந்து நாசமானது.

மைசூர் திப்பு சுல்தான் அரண்மனையில் 4 வாயில்கள் உள்ளன. வடக்கு பகுதியில் உள்ள வரஹா கேட் அருகே, ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம்மில் நேற்று அதிகாலை திடீரென்று தீப்பிடித்தது.

இந்த தீ, அருகில் இருந்த டிக்கெட் கவுன்ட்டருக்கும் பரவி எரிந்தது. இது குறித்து அரண்மனை காவலாளி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த அவர்கள், தீயை போராடி அணைத்தனர். ஆனாலும் டிக்கெட் கவுன்ட்டரில் இருந்த இயந்திரம், ஆவணங்கள், ஏ.டி.எம். இயந்திரம், ஏ.சி. ஆகியவை எரிந்து நாசமானது.

தீ விபத்து நடந்த ஏ.டி.எம்.யில் 3 லட்சம் ரூபாய், ஏ.டி.எம். எந்திரத்துடன் எரிந்து நாசமானது தெரியவந்துள்ளது. இது பற்றி மைசூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க