• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘வைபை’ வசதியுடன் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகள்

May 12, 2017 தண்டோரா குழு

கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் (KSRTC) சார்பில் பஸ்களில் தண்ணீர், வைபை ஆகிய வசதிகளுடன் மக்கள் எளிமையாக பிரயாணம் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகப்படவுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகரிலிருந்து பல இடங்களுக்கு கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம்(KSRTC) பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் பயணிக்கும் மக்களின் பயணம் நல்ல முறையில் அமைய வேண்டும் என்பதற்காக வைபை மற்றும் தண்ணீர் வசதிகளுடன் பயணம் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

KSRTC, NWKSRTC, மற்றும் NEKSRTC ஆகிய பஸ்களில் சிறந்த திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அடங்கிய தொகுப்பை பயணிகள் பயன்படுத்த கூடிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம்(KSRTC) அதிகாரி கூறுகையில்,

“KSRTC, NWKSRTC, மற்றும் NEKSRTC ஆகிய பஸ்களில் சிறந்த திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அடங்கிய தொகுப்பை பயணிகள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 17,௦௦௦ போக்குவரத்து பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் இலவச இணையதளம், மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அடங்கிய தொகுப்பை பெற்றுக்கொள்ள எங்களை தொடர்புக்கொள்ளலாம். ஒரு மாத காலத்திற்குள் இந்த புதிய திட்டத்தை அறிமுகபடுத்த வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம்”” என்றார்.

கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம்(KSRTC) நிறுவனத்தின் தலைவர், கே.கோபால பூஜாரி கூறுகையில்,

“ஏசி படுக்கை வசதிக்கொண்ட கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்களில் பயணிகளுக்கு குடிநீர் வழங்கப்படும். அனைத்து முக்கிய பஸ் நிலையங்களில் மக்கள் 1 ரூபாய்க்கு 1 லிட்டர் குடிநீர் பெற்றுக்கொள்ள Reverse Osmosis (RO) என்னும் புதிய திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறோம்.

காலை 5 மணிமுதல் 11 மணிவரை ப்ரீமியம் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவச செய்தித்தாள்கள் தரப்படும். அதேபோல் விமான நிலையம், பெங்களூர் கேம்பகோடா பேருந்து நிலையம், மைசூர் போகும் சாலையிலுள்ள செயற்கைக்கோள் பேருந்து நிலையம், பெங்களூரின் சாந்திநகர் மற்றும் மைசூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து புறப்படும் பயணிகளுக்கும் செய்திதாள்கள் கொடுக்கப்படும்.

சுங்கச்சாவடிகளில் தானியங்கி கட்டணம் செலுத்த உதவும் ரேடியோ அதிர்வெண் 8400 KSRTC பஸ்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேருந்துகள் சுங்கச்சாவடியில் அதிக நேரம் செலவிடுவதை தடுக்க முடியும்” ” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க