• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறை கிடையாது

May 11, 2017 தண்டோராகுழு

பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பிளஸ் 2 முடிவுகள் இதுவரை முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது.முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது எனவும் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பெயரும் வெளியாகாது எனவும் கூறினார்.

மேலும், சி.பி.எஸ்.இ., முறை போல் மாநில அரசு கடைபிடிக்கும். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறந்த மாணவர்கள் என சான்றிதழ் வழங்கப்படும். மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். மதிப்பெண்கள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவிலும் இதேமுறை கடைபிடிக்கப்படும் என கூறினார்.

மேலும் படிக்க