• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸில் +2 ரிசல்ட்

May 10, 2017 தண்டோரா குழு

+2 மாணவர்களுக்கு செல்போன் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,
இந்த வருடம் +2 தேர்வு எழுதியுள்ள ஒன்பதரை லட்சம் மாணவர்களுக்கு, தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடங்களில், அவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக, மதிப்பெண் விபரங்களுடன் தேர்வு முடிவுகள் அனுபப்படும் என தெரிவித்தார்.

மேலும், மாணவர்களின் சான்றிதழ்களை மின் ஆவணம் மூலம் பாதுகாக்கப்படும் எனவும், நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் பாட திட்டம் தயாரிக்கப்படும் என்றும் கூறிய அவர் இந்த பாடதிட்டத்தை தயாரிப்பதற்கான கலந்தாலோசனைக் கூட்டம் நாளை நடைப்பெறும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க