• Download mobile app
16 Jan 2026, FridayEdition - 3628
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸில் +2 ரிசல்ட்

May 10, 2017 தண்டோரா குழு

+2 மாணவர்களுக்கு செல்போன் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,
இந்த வருடம் +2 தேர்வு எழுதியுள்ள ஒன்பதரை லட்சம் மாணவர்களுக்கு, தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடங்களில், அவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக, மதிப்பெண் விபரங்களுடன் தேர்வு முடிவுகள் அனுபப்படும் என தெரிவித்தார்.

மேலும், மாணவர்களின் சான்றிதழ்களை மின் ஆவணம் மூலம் பாதுகாக்கப்படும் எனவும், நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் பாட திட்டம் தயாரிக்கப்படும் என்றும் கூறிய அவர் இந்த பாடதிட்டத்தை தயாரிப்பதற்கான கலந்தாலோசனைக் கூட்டம் நாளை நடைப்பெறும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க