• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காணமல் போன கடல் கிடைத்துவிட்டது

May 9, 2017 தண்டோரா குழு

ஐயர்லாந்தில் 3௦ ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கடல், அங்கு வீசிய சூறாவளி காற்று மற்றும் மழை காரணமாக மீண்டும் தோன்றியது. இந்த அதிசயம் அந்நாட்டு மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐயர்லாந்து நாட்டில் ஆச்சில் தீவில் டூவாக் என்னும் சிறிய கிராமம் அமைந்துள்ளது. அங்கு 3௦௦ மீட்டர் நீளத்தில் அழகான மையோ கடல் பகுதி உள்ளது . அந்த இடம் சுற்றுலா பயணிகளுக்கு பிரபலமானது. உணவு விடுதிகள், தேநீர் விடுதிகள், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் ஆகியவை கடற்கரை பகுதியில் அழகுடன் காணப்பட்டன.

எதிர்பாராதவிதமாக, 1984-ம் ஆண்டு அப்பகுதியில் ஏற்பட்ட சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் இந்த கடல் உள்வாங்கிவிட்டது. இதனால் அந்த கடல் காணமல் போய்விட்டது என்று அப்பகுதி மக்கள் கூறிவந்தனர்.

இதையடுத்து அந்த இடத்தில் வெறும் பாறைகளும் சிறு சிறு குளங்களும் மட்டுமே இருந்தன. இதனால் சுற்றுலா பயணிகளும் அந்த இடத்திற்கு வருவதை விரும்பவில்லை. டூவாக்கில் இருந்த அனைத்து விடுதிகளும் மூடப்பட்டன. இதனால், வர்த்தகர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு ஈஸ்ட்டர் திருவிழாவின்போது, அங்கு பெரிய அளவில் சூறாவளி காற்று வீசியது. அதன் பின் சிறிது நேரத்தில், முன்பு கடல் சூழ்ந்திருந்த இடத்தில் மணல்கள் மலை போல் குவிந்தன. 1௦ நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால், அந்த இடம் முழுவதும் தண்ணீரால் நிரம்பியது. இதனால் காணமல் போன கடல் மீண்டும் அந்த இடத்திற்கு வந்ததை போல் அந்த இடம் உருவானது.

ஆச்சில் சுற்றுலா அதிகாரி, சியன் மொல்லாய் கூறுகையில், “கடல் மீண்டும் அந்த பகுதியை சூழ்ந்துள்ளதை கண்ட உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த கடல் கடைசியாக 1984-ம் ஆண்டு தான் பார்த்தோம். அதற்கு பிறகு தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலமாக இருந்தது. ஏப்ரல் மாதல் ஏற்பட்ட சூறவெளி காற்றும், 1௦ நாளாக தொடர்ந்து பெய்த கடும் மழையால், மீண்டும் கடல் உருவாகியுள்ளது” என்றார்.

“மீண்டும் உருவாகிய மழையால் சுற்றுலா பயணிகள் வருகை மீண்டும் தொடங்கியுள்ளது. முன்பிருந்த வெறும் பாறைகளில் இருந்த இடம், இப்போது தண்ணீர் சூழ்த்த கடலாக பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது” என்று உள்ளூர் விடுதி உரிமையாளர், ஆலன் கில்டி கூறினார்.

மேலும் படிக்க