• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கீழ் நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்கதடை

May 9, 2017 தண்டோரா குழு

கீழ் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

1994ம் ஆண்டு வெளியிடப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற அறிக்கையில் தமிழகம் முழுவதும் கீழ் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து 2014ல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அப்போது அந்த ரிட் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்திருந்தனர். தொடர்ந்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்கலாம் என கூறினர்.இதனையடுத்து, அந்த அறிவிப்பினை எதிர்த்து 2015ல் தொடரப்பட்ட வழக்கில், தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதைதொடர்ந்து 2015ல் வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் இன்று விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கீழ் நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பு அளித்தது. மேலும், இவ்வழக்கானது பின்னர் விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் படிக்க