• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரபல சித்தார் இசைக்கருவி கலைஞர் உஸ்தாத் ரைஸ் கான் மறைவு

May 8, 2017 தண்டோரா குழு

பிரபல சித்தார் இசைக்கருவி கலைஞர் உஸ்தாத் ரைஸ் கான்(77) பாகிஸ்தானில் சனிக்கிழமை(மே 6) காலமானார்.

1939ம் ஆண்டு, இந்தியாவின் இந்தூர் நகரில் உஸ்தாத் ரைஸ் கான் பிறந்தார். அவருடைய குடும்பம் இசை வல்லுனர்களை கொண்ட குடும்பம். அவருடைய தாய்வழி தாத்தா இன்னாயத் அலி கான், இந்திய துணைக்கண்டத்தின் சித்தார் இசைக்கருவியை வாசிக்கும் பிரபலமானவர்களில் ஒருவராக கருதப்பட்டார்.

உஸ்தாத் ரைஸ் கான் தன்னுடைய மாமா வாலாயத் அலி கானிடமிருந்து இசையை கற்றுக்கொண்டார். தனது 5வது வயதில் மும்பையிலுள்ள சுந்தர் பி ஹால் என்னும் இடத்தில் தன்னுடைய முதல் இசை நிகழ்ச்சியை நடத்தினார்.அப்போதைய இந்திய ஆளுநர் அவருடைய இசை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, அவருடைய திறமையை பாராட்டியுள்ளனர்.

கான் பல நாடுகளுக்குச் சென்று தனது இசையால் மக்கள் மனததை கவர்ந்தார்.அதன் பிறகு, போலாந்து நாட்டிற்கு தன்னுடைய முதல் சர்வதேச பயணத்தை மேற்கொண்டார். பின்னர் 1963ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தினார். 1968ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டிற்கு குடிபெயர்ந்த அவர், 1979ம் ஆண்டு பல்கீஸ் பேகம் என்பவரை சந்தித்தார். அவர் ஒரு இசை கலைஞர் கூட. பல்கீஸ் பேகத்தை அடுத்த ஆண்டே திருமணம் செய்துக்கொண்டார்.

லதா மங்கேஷ்கர் தனது ட்விட்டரில்,

“சித்தார் கலைஞர் உஸ்தாத் ரைஸ் கான், காலமான செய்தி வருத்தத்தை அளிக்கிறது. என்னுடைய ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

பாகிஸ்தான் பாடகர் அலி ஜாபர் தனது ட்விட்டரில்,

“அவருடைய மறைவு மிகவும் வருத்தத்தை தருகிறது.அவருடன் இருந்த நாட்களின் அற்புதமான நினைவுகளை என் இருதயத்தில் வைத்துள்ளேன். கடவுள் அவருடைய ஆன்மாவை ஆசிர்வதிப்பாராக” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், 2௦௦5ம் ஆண்டு “ஜனாதிபதி விருதும்”, 2௦௦7ம் ஆண்டு “சித்தாரா எல்ம்டியாஸ்” விருதும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க