• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேசிய பாதுகாப்பு நிதிக்கு 1 கோடி ரூபாய் வழங்கிய வங்கி ஊழியர்

May 8, 2017 தண்டோரா குழு

தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஒருவர் 1 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் பகுதியில் வசிக்கும் ஜனார்த்தன் பாத்(84) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்.இவர் தேசிய பாதுகாப்பு நிதிக்கு 1 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்திய எல்லை பாதுகாப்பு படைவீர்கள் தீவிரவாதத்தை முறியடிக்க போராடி வருகின்றனர். சமீபத்தில், இந்த வீரர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் செய்திதாள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டது. இதை பார்த்த ஜனார்த்தன், இறந்த வீரர்களுக்கு ஏதாவது ஒரு முறையில் உதவி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்.

இதையடுத்து சிறிது சிறிதாக தான் சேமித்த பணம் மற்றும் பல்வேறு முதலீடுகளில் சேமித்த பணத்தால் அவருக்கு 1 கோடி ரூபாய் கிடைத்தது. அந்த தொகையை தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

மேலும் அவர் வங்கியின் தொழிற்சங்க தலைவராக இருந்தபோது, தன்னுடைய சக ஊழியர்கள் சந்தித்த பிரச்சனைகளிலிருந்து வெளி வர அவர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். அதோடு, உதவி தேவைப்பட்ட மக்களுக்காக அவரும் அவருடைய நண்பர்களும் 54 லட்சம் கொடுத்து உதவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க