• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாயை காப்பாற்ற சென்ற தொழிலதிபர் கடலில் மூழ்கி மரணம்

May 5, 2017 தண்டோரா குழு

துபாயில் கடலில் சிக்கிய நாயை காப்பாற்ற சென்ற தொழிலதிபர் கடலில் மூழ்கி பலியானார்.

மும்பை நகரிலுள்ள அந்தேரியைச் சேர்ந்தவர் நிதின் ஷெனாய்(41). அவர் தேஜோரா டெக்னாலஜீஸ் லிமிடெட் என்னும் ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். தொழில் விஷயமாக துபாய் செல்வது வழக்கம்.

சமீபத்தில் வேலை காரணமாக துபாய் சென்றுள்ளார். அங்குள்ள பாம் ஜுமைரா என்னும் கடற்கரையில் நடந்துக்கொண்டிருந்த போது, கடலில் ஒரு நாய் சிக்கி தத்தளித்து கொண்டிருந்ததை கண்டு, அதை காப்பாற்ற கடலில் குதித்த அவர் சடலமாக கரைக்கு திரும்பினார்.

“நிதினுக்கு நாய்கள் என்றால் மிகவும் பிரியம். நீச்சல் குளத்தில் மட்டும் நீச்சலடிக்க தெரியும். கடலுக்குள் நீந்த தெரியாது. அவரில்லாமல் எப்படி வாழப்போகிறேனோ தெரியவில்லை” என்று கண்ணீருடன் நிதின் மனைவி தெரிவித்தார்.

கடலில் மூழ்கியதால் தான் நிதின் மரணமடைந்தார் என்று துபாய் காவல்துறையினர் இறப்பு சான்றிதழ் தந்து, அவருடைய உடலை இந்தியாவிற்கு எடுத்து செல்லலாம் என்று துபாயின் அல் ஹம்ரியா நகரிலுள்ள இந்திய தூதர அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க