• Download mobile app
01 Dec 2025, MondayEdition - 3582
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் உ.பி யில் மலிவு விலை உணவகம் – யோகி ஆதித்யநாத்

May 5, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில் ஆரோக்கியமான உணவு வழங்க உணவகம் ஒன்றை விரைவில் திறக்கப்படவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்ற பிறகு, அம்மாநிலத்தில் பல மாற்றங்களை கொண்டு வருகிறார். ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் ஆரோக்கியமான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக “அன்னபூர்ணா போஜனாலையா” என்ற உணவகத்தை விரைவில் திறக்கப்படும் என்று அவருடைய அரசு அறிவித்துள்ளது.

இதுக்குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“குடிமக்கள் ஒருவரும் பசியால் வேதனையடையக் கூடாது என்ற நோக்கத்தில் தான் இந்த உணவகம் திறக்கப்படவுள்ளது. காலை தாலியா, இட்லி சாம்பார், போகா, பகோடா ஆகியவை 3 ரூபாய்க்கு கிடைக்கும். மதியம் ரொட்டி, பருப்பு, அரிசிசாதம் மற்றும் காய்கறிகள் ஆகியவை 5 ரூபாய்க்கும் கிடைக்கும். அதேபோல் இரவு உணவும் 5 ரூபாய்க்கும் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் ஜான்சி நகரில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பேரணியின் போது, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், “மக்கள் ஒருவரும் பட்டினியுடன் உறங்கப்போவதில்லை,அனைவருக்கும் உணவு வழங்கப்படும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க