• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செயலிழந்த வாட்ஸ் ஆப் நெட்டிசன்கள் அதிர்ச்சி

May 4, 2017 தண்டோரா குழு

உலகளவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள மெசெஞ்சிங் ஆப்
வாட்ஸ்ஆப்.இதனை 1 பில்லியனுக்கு அதிகமான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப் இல்லாத ஸ்மார்ட் போன்களே இல்லாத நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை வாட்ஸ் ஆப் சிறிது நேரம் செயலிழந்தது. மெசெஜ் அனுப்பவது உள்ளிட்ட அனைத்து சேவைகளும் குறிப்பிட்ட நேரம் செயலிழந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணி முதல் 5 மணி வரை வாட்ஸ் ஆப் தற்காலிகமாக செயலிழந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது தான் காரணமா ?மாற்றத்திற்கான புதிய முயற்சியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு அல்லது வாட்ஸ் ஆப் பீட்டா 2.17.140 பதிப்பை முழுமையாக கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல் போன்ற காரணங்களால் வாட்ஸ் ஆப் சேவை நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியா, கனடா, அமெரிக்கா மற்றும் பிரேசிலில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது வாட்ஸ் ஆப் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. எனினும் தொடர்ந்து வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி நெட்டிசன்களுக்கு திடீரென வாட்ஸ் ஆப் செயலிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதனால் சிறிது நேரம் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் படிக்க