• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

50 பாக்., ராணுவ வீரர்கள் தலை வேண்டும்: கொல்லப்பட்ட இந்திய வீரர் மகள்

May 2, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தான் வீரர்கள் 50 பேரின் தலை துண்டிக்கப்பட வேண்டும் என இந்திய வீரர் பிரேம்சாகர் மகள் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகாதி பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பரம்ஜீத் சிங் என்ற வீரரும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பிரேம் சாகர் என்ற வீரரும் வீரமரணம் அடைந்தனர்.

இதுமட்டுமின்றி அவர்கள் இருவரின் உடலையும் பாகிஸ்தான் ராணுவத்தினர் சிதைத்துள்ளனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உ.பி.,யின் தியோரியா பகுதியை சேர்ந்த பிரேம் சாகரின் மகள் கூறுகையில்,

தனது தந்தையின் தியாகத்திற்கு 50 பாகிஸ்தான் வீரர்களின் உடல்கள் துண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

அதைபோல், பரம்ஜித் சிங் மகள் சிம்ரந்தீப் கூறுகையில்,

எனது தந்தை நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார். இதற்காக நான் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க