• Download mobile app
01 Dec 2025, MondayEdition - 3582
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தற்கொலைக்குத் தூண்டும் ‘ப்ளூ வேல்’விளையாட்டுக்கு தடை

April 29, 2017 தண்டோரா குழு

சிலி நாட்டில் தற்கொலைக்குத் தூண்டும் ‘ப்ளூ வேல்’ என்னும் ஆன்லைன் விளையாட்டை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில், 5௦ நாட்கள் ஆன்லைன் மூலம் ‘‘ப்ளூ வேல் சேலஞ்ச்’ என்னும் விளையாட்டில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு விடப்பட்டது. இந்த விளையாட்டின் இறுதியில் பங்கேற்ற சுமார் 1௦௦ இளைஞர்கள் தற்கொலை செய்துக்கொண்டதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளன.

இதன் காரணமாக இந்த விளையாட்டை சிலி தடை செய்துள்ளது. தடையை மீறி விளையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தற்கொலையை தடுக்கும் விதமாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு சிலி நாட்டு சைபர் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் படிக்க