• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“ராமமோகன ராவுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது குறித்து பா.ஜ.க ஏன் எதுவும் கேட்கவில்லை” – ஸ்டாலின்

April 29, 2017 தண்டோரா குழு

எல்லாவற்றிற்கும் அறிக்கை விடும் பாரதிய ஜனதாக் கட்சி, தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது குறித்து எதுவும் கேட்காதது ஏன் ? என்று தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தில்லி போலீஸ் உள்ளிட்ட அனைத்து ஏஜென்சிகளையும் அனுப்பி தமிழக அரசு நிர்வாகத்தை நிலைகுலைய வைத்துள்ளது மத்திய அரசு.

எல்லாவற்றிற்கும் அறிக்கை விடும் பாரதிய ஜனதாக் கட்சி, தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது குறித்து எதுவும் கேட்காதது ஏன்?

திராவிட உணர்வு மேலோங்கி இருக்கும் தமிழகத்தில் பாரதிய ஜனதாவை காலூன்ற வைக்க வேண்டும் என்ற அவசரத்தில் தமிழக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு, மாநில நிர்வாகத்தை தேக்க நிலைக்கு கொண்டு வந்து விட்டது மத்திய அரசு.

அதிமுகவின் ஊழல் அணிகளை இணைப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகளில் ஒரு சதவிகிதம் கூட தமிழக மக்கள் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை. தனது சுயநலத்திற்காக அரசியல் சட்ட அமைப்புகளை கண்மூடித்தனமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது.

தமிழகத்தில் பாரதிய ஜனதாவை வளர்க்கும் முயற்சியை கைவிட்டு விட்டு, தமிழக அமைச்சர்களின் இல்லங்களில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை வைத்து தயவு தாட்சண்யமின்றி அமைச்சர்கள் மீது நடடிவக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க