• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் வாகன விபத்தில் பலி

April 29, 2017 தண்டோரா குழு

போலீசாரால் சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவுடைய முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், ஆத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

கடந்த 24ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில்,மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம், 2012-ம் ஆண்டில் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கனகராஜ் சேலம் ஆத்தூரில் வாகன விபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து, விபத்து தற்செயலானதா? திட்டமிடப்பட்டதா?என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க