• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை – தமிழக முதலமைச்சர்

April 29, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை மின் பழுது வேண்டுமானால் ஏற்பட்டு இருக்கலாம் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சேலத்தில் பல்வேறு நலத்திட்டப்பணிகள் வழங்கும் விழாவில் வெள்ளிக்கிழமை கலந்து கொண்ட அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. மின்பழுது வேண்டுமானால் ஏற்பட்டிருக்கலாம். தங்கு தடையின்றி தேவையான மின்உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எங்கேயாவது மின்பழுது ஏற்படும் போது அதனை உடடினயாக சரிசெய்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

நான் பதவியேற்று 70 நாட்கள் ஆகிறது. இந்த நாளில் 1560 கோப்புகளுக்கு கையெழுத்திட்டு இருக்கேன். ஒரு கோப்பு கூட நிலுவையில் இல்லை. அரசு இயந்திரம் வேகமாக துரிதமாக செயல்படுகிறது. தேங்கியிருந்த கோப்புகள் எல்லாம் செயல்படுத்தப்பட்டுள்ளன.

வாக்குறுதியின் படி படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு வருகிறது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது”

இவ்வாறு முதல்வர் கூறினார்.

மேலும் படிக்க