• Download mobile app
23 Feb 2026, MondayEdition - 3666
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பீஸ் போன பஞ்சாப்: அசால்ட்டா ஜெயித்த ஐதராபாத்!

April 29, 2017 tamilsamayam.com

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், ஐதராபாத் அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் மொஹாலியில் நடந்த 33வது லீக் போட்டியில், ஐதராபாத், பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் மேக்ஸ்வெல் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

தவான் அரைசதம்:

இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு, வார்னர் (51), தவான் (77), வில்லியம்சன் (54*) ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுக்க, ஐதராபாத் அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது.

மார்ஷ் பிராமாதம்:

கடின இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு டாப் ஆர்டர் வீரர்களான கப்டில் (23), வோஹ்ரா (3), கேப்டன் மேக்ஸ்வெல் (0) என சொதப்ப, மார்ஷ் (84) அரைசதம் அடித்து அசத்தினார். பின்வரிசை வீரர்கள் சொதப்ப, பஞ்சாப் அணி, 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டும் எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மேலும் படிக்க