• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற உயர்நீதி மன்றம் இடைக்கால தடை !!

April 28, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் சீமைக் கருவேலமரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து, சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஐ.ஐ.டி. நிபுணர் குழுவை அமைக்க கோரி வழக்கறிஞர் மேகநாதன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் சீமைக் கருவேலமரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி மாற்றி ஐஐடி இயக்குநர் பதிலளிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கை மே 11ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற மே 11 வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க