• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது – அய்யாக்கண்ணு

April 28, 2017 தண்டோரா குழு

தமிழக விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் தென்னக நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“தமிழக விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. விவசாய கடனை தள்ளுபடி செய்தால் மட்டுமே தமிழக விவசாயிகளின் தற்கொலையை தடுக்க முடியும்.

வங்கியில் விவசாயி வாங்கிய கடனுக்காக வங்கி அதிகாரிகள் கடன் பெற்ற விவசாயிகளின் மனைவி, மக்களை தரக்குறைவாக பேசுவது மற்றும் வீடு, நிலங்களை விற்று கடனை அடைக்குமாறு கூறுவதாலேயே விவசாயிகள் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.

வங்கி அதிகாரிகள் விவசாயிகளை மிரட்டுவதை அரசு கண்டிக்க வேண்டும். தமிழக அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த கருத்துக்கும் கடும் கண்டனம்.”

இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.

மேலும் படிக்க