• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொருளாதார உறவுகளை பலபடுத்த ஹமீது அன்சாரி போலாந்து பயணம்

April 27, 2017 தண்டோரா குழு

இருநாடுகளின் பொருளாதார உறவுகளை பலபடுத்தும் வகையில், இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி மூன்று நாள் அரசு பயணமாக போலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.

ஹமீது அன்சாரியுடன் அவருடைய மனைவி சல்மா அன்சாரியும் சென்றுள்ளார். மத்திய சிறு குறு தொழில்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், சீதாராம் யெச்சுரி, டி.பி. திரிபாதி, விவேக் தங்கா உள்ளிட்டோரும் போலாந்து சென்றுள்ளனர்.

போலாந்து நாட்டின் பிரதமர் பியட்டா சைட்லோவை, அன்சாரி இன்று சந்தித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, சில ஒப்பந்தங்களில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர். போலாந்து நாட்டின் குடியரசுத் தலைவர் அன்ட்ராஸ் டுடாவையும் அவர் இன்று சந்திக்க உள்ளார்.

மேலும், போலாந்து நாட்டின் பொருளாதார மேம்பாடு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்திய போலாந்து வணிக மன்றத்தில் அன்சாரி கலந்துக்கொண்டு பேச இருக்கிறார்.

இருநாடுகளின் பொருளாதார உறவுகளை பலபடுத்தும் வகையில், இந்த பயணம் அமைந்துள்ளது. இரு நாடுகளிலிருந்தும் சுமார் 15௦ தொழிலதிபர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

மேலும் போலாந்து தூதர் பிசாரியா ஏற்பாடு செய்துள்ள விசேஷ இரவு உணவு விழாவில் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியும் அவருடைய மனைவி சல்மா அன்சாரியும் கலந்துக்கொள்வர்கள் எனவும் அந்த விழாவின் போது, போலந்து நாட்டில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடுவார் என்றும் கருதப்படுகிறது.

மேலும் படிக்க