• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூரில் மதுப்பானக் கடை பாரை அடித்து நொறுக்கிய மக்கள்

April 26, 2017 தண்டோரா குழு

திருப்பூர் முதலிபாளையம் அருகே மதுப்பானக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் அக்கடையின் பாரை அடித்து நொறுக்கினர்.

திருப்பூர் அருகே உள்ள முதலிபாளையம் சிட்கோ பகுதி பேருந்து நிலையத்தின் அருகில் மதுப்பானக் கடை செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலையம் அருகில் இக்கடை அமைந்துள்ளதால் மது அருந்த வருவோர் மது அருந்திவிட்டி சாலையில் நிற்கும் பயணிகளிடம் தொந்தரவு செய்வதாகவும், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரிடமிருந்தும் புகார்கள் எழுந்தன.

இந்தக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று அப்பகுதி மக்கள் மதுப்பானக் கடையை முற்றுகையிட முயன்றனர். அப்போது மக்கள் திடீரென்று ஆவேசமடைந்து மதுப்பானக் கடையின் பாரை அடித்து நொறுக்கினர்.

இதனிடையே தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பதற்றமான சூழல் நிலையை தவிர்க்க அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அண்மை காலமாக தமிழகத்தில் மதுப்பானக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் இந்த சுழலில் இச்சம்பவம் திரூப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க