அ.தி.மு.க.வின் இரு அணிகளும், அம்மாவின் தொண்டர்களும் ஒன்றாக இணைய வேண்டும் என்பது தான் ஓ.பி.எஸ். உள்ளிட்ட அனைவரின் விருப்பமாகும் என்று ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த பொன்னையன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
“இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி. தினகரன் லஞ்சம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார், எனவே தினகரன் கைது செய்யப்பட்டிருப்பது சரியான நடவடிக்கையே.
இந்த விவகாரத்தில் புலனாய்வு செய்து உண்மைகளை அதிகாரிகள் வெளிக்கொண்டு வர வேண்டும். லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் மூலம் சசிகலா குடும்பத்தினர் தமிழ்நாட்டுக்கே தலை குனிவையும், மானக்கேட்டையும் ஏற்படுத்தி விட்டனர்.
இரட்டை இலை பெற்று ஓ.பி.எஸ். அணியை அழிக்க வேண்டும் என நினைத்தனர். அதை ஜெயலலிதாவின் ஆத்மாவும், ஆவியும் பார்த்துக் கொண்டிருக்காமல் பழிவாங்கி விட்டது. இதனால் ஓ.பி.எஸ். அணி தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
நேர்மையும், சத்தியமும் சட்டத்தின் நீதியும் வென்று விட்டது. ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே போயஸ் தோட்டத்தில் இருந்தும், கட்சியில் இருந்தும் டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் விரட்டியடிக்கப்பட்டனர்.
அ.தி.மு.க.வின் இரு அணிகளும், அம்மாவின் தொண்டர்களும் ஒன்றாக இணைய வேண்டும் என்பது தான் ஓ.பி.எஸ். உள்ளிட்ட அனைவரின் விருப்பமாகும். பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டி சசிகலா குடும்பத்தை நீக்க வேண்டும்.
ஜெயலலிதா மரணத்தில் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் சந்தேகம் உள்ளது. எனவே அவரது மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஓ.பி.எஸ். அணிக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.”
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு