• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விருந்தில் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் – பீட்டா அமைப்பு

April 25, 2017 தண்டோரா குழு

அரசு நிகழ்ச்சிகளில் இறைச்சி விருந்துகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பீட்டா அமைப்பு பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது;

“அனைத்து அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் அரசு சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் இறைச்சி விருந்துகளுக்கு தடை விதிக்க வேண்டும்.ஜெர்மனி நாட்டின் சுகாதார அமைச்சர் பார்பரா ஹென்ரிக்ஸ் அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளில் இறைச்சி விருந்துக்கு தடை செய்துள்ளார். அவருடைய எடுத்துக்காட்டை இந்தியா பிரதமரும் பின்பற்ற வேண்டும்.பருவநிலை மாற்றத்திற்கு இறைச்சி தாயரிப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

உணவிற்காக விலங்குகளை வளர்ப்பதால் நிலம் மற்றும் உணவு வளங்களை இழக்க நேர்கிறது. இறைச்சியை தடை செய்வதால் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை காட்டும் நாடாக இந்தியா திகழும் என்பதில் ஐயம் இல்லை”

இவ்வாறு பீட்டா அமைப்பு கூறியுள்ளது.

மேலும் படிக்க