• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தினகரன் – சுகேஷ் தொலைபேசி பேச்சு உரையாடல் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

April 25, 2017 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னம் பெற தினகரன் – சுகேஷ் தொலைபேசி பேச்சு உரையாடல் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் தர முயன்ற விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இன்று போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து சுகேசை மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்தனர். ஆனால்3 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

அப்போது நீதிபதி,தினகரன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.அதற்கு போலீசார்,தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி மட்டுமே விசாரணை நடத்தி வருகிறோம் எனக்கூறினர்.மேலும்,தினகரன் – சுகேஷ் தொலைபேசி பேச்சு உரையாடல் ஆதாரங்களை டில்லி நீதிமன்றத்தில் போலீசார் சமர்ப்பித்தனர்.

மேலும் படிக்க