• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

125 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக இருசக்கர வாகனம் பரிசு.

April 21, 2017 தண்டோரா குழு

சூரத் வைர வியாபாரி தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் 125 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக இருசக்கர வாகனத்தை பரிசாக அளித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரை சேர்ந்தவர் லக்‌ஷ்மிதாஸ் வெக்கரியா. அவர் வியாழக்கிழமை(ஏப்ரல் 2௦) மாலை பரிசளிப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவிற்கு வரும்படி ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவருடைய அழைப்பை ஏற்ற 125 ஊழியர்களும் விழாவிற்கு வந்திருந்தனர்.அவ்விழாவில் பகுதி நேரப் பணியாளர்களில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைவருக்குமே இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதை சிறிதும் எதிர்ப்பார்க்காத ஊழியர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

சூரத் நகரை சேர்ந்த மற்றொரு வைர வியாபாரி சவ்ஜி தோலாக்கியா என்பவர் தன்னுடைய நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வீடுகள் மற்றும் கார்களை பரிசாக தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க