• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாட்ஸ்-அப் குரூப்பில் தவறான தகவல்களை பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!

April 21, 2017 தண்டோரா குழு

சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் உலக அளவில் அதிக பயனாளர்களை கொண்டுள்ளது.இதில், இந்தியாவில் மட்டும் 20 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்-ஆப் பயனாளர்கள் இருக்கின்றனர்.

வாட்ஸ் ஆப்பில் அவ்வப்போது தவறான தகவல்கள் பரவி வருகிறது.இந்நிலையில், தவறான தகவல்கள், மோசமான வீடியோக்களை வாட்ஸ்-ஆப் அல்லது ஃபேஸ்புக் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில் தண்டனை வழங்கலாம் என்று வாரணாசியின் மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்,

பல வாட்ஸ்-ஆப் மற்றும் ஃபேஸ்புக் குரூப்களில் உண்மை இல்லாத பல செய்திகள் பரவ விடப்படுகின்றன. இந்த மாதிரி தகவல்கள் சரியாகத் தான் இருக்கிறதா என்று பார்க்கமாலேயே பகிரப்படுகின்றன. அப்படிப்பட்ட தகவல்களை பரவவிடும் குரூப்பில் இருக்கும் நபரை குரூப் அட்மின் நீக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட நபர் பற்றி அருகில் இருக்கும் காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும். குரூப் அட்மின் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் அல்லது வாட்ஸ்-ஆப் குரூப்பில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் மோசமான வீடியோக்களால் பல பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க