• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆவணங்களை சமர்ப்பிக்க ஜூன் 16-ம் தேதி வரை அவசகாசம் – இந்திய தேர்தல் ஆணையம்

April 21, 2017 தண்டோரா குழு

இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க, அ.தி.மு.க.,வின் இரண்டு அணிகளுக்கும் ஜூன் 16-ம் தேதி வரை கால அவசகாசம் அளித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க., ஒ.பன்னீர்செல்வம் அணி, வி.கே. சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. இதனிடையே ஜெயலலிதா சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த சென்னை ஆர்கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் இரு அணிகளும் தனிதனியே வேட்பாளரை அறிவித்து இரட்டை இலைச் சின்னத்துக்குப் போட்டி போட்டன. மேலும் இந்த சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என்று ஆவணங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தன.

இதனால் அந்தச் சின்னத்தை முடக்குவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்கவும் இரு அணிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் பணம் பட்டுவாடா விவகாரம் தொடர்பாக இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து இரு அணிகளும் இரட்டை இலைச்சின்னத்தை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இதனிடையே, கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய, இரண்டு அணிகளுக்கும் ஜூன் 16-ம் தேதி வரை இந்திய தேர்தல் ஆணையம் அவகாசம் கொடுத்துள்ளது.

மேலும் படிக்க