• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் தனுஷ் வழக்கின் இறுதி தீர்ப்பு

April 21, 2017 தண்டோரா குழு

நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக்கூறி மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன் தம்பதி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளைதள்ளுபடி செய்தது.

மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என மதுரை மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்யும் படி தனுஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தனுஷ் நேரில் ஆஜராகி அங்க அடையாளங்கள் பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கிடையில், தனுஷின் கல்வி சான்றிதழ் போலியானது எனவும் அவருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என மேலூர் தம்பதியினர் கூறிவந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்த நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக்கூறி மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன் தம்பதி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளைதள்ளுபடி செய்தது.

தனுஷ் எங்கள் மகன் தான் என்பது மனசாட்சிக்கு தெரியும். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என கதிரேசன் தம்பதியினர் கூறினார்.

மேலும் படிக்க