• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெட்ரோல் கிடைக்காமல் மக்கள் அவதிபட்டால் கடும் நடவடிக்கை

April 19, 2017 தண்டோரா குழு

ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை காரணமாக பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தங்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடப்படும் அறிவித்தனர்.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி முதல், ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை விடப்படும் என பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் விடப்படும் விடுமுறை காரணமாக பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்,அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க