• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பரம்பிக்குளம் சட்டம் ஒழுங்கு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

April 18, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சார் ஆட்சியர் அலுவலகத்தில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் தலைமையில் இன்று பரம்பிக்குளம் சட்டம் ஒழுங்கு குறித்து சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் பரம்பிக்குளம் மாவட்ட வனஅலுவலர் ,பொள்ளாச்சி மாவட்ட வனஅலுவலர்,பரம்பிக்குளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் , வால்பாறை கண்காணிப்பாளர் , செயற்பொறியாளர், பரம்பிக்குளம் பொதுப்பணித்துறை,பொள்ளாச்சி வட்டாட்சியர்,டாப்சிலிப் வன அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சமாதான கூட்டத்தில், தமிழகப்பொதுப்பணித்துறை அலுவலர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையினை திரும்ப பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன் பின் இரு மாநிலங்களுக்கிடையே அமைதி மற்றும் நல்லுறவு ஏற்பட அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு நல்குவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் படிக்க