• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாளை அனல் காற்று வீசும் வீடுகளை விட்டு வெளியே வராதீங்க – வானிலை மையம்

April 17, 2017 தண்டோரா குழு

நாளை அனல் காற்று வீசும் வாய்ப்புகள் இருப்பதால், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத அளவுக்கு வெயில் வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இன்று அதிகபட்சமாக திருத்தணியில் 111 டிகிரியும், வேலூரில் 110 டிகிரியும், சென்னையில் 108 டிகிரியும் வெயில் பதிவானது.

இந்நிலையில், தமிழகத்தில் நாளை வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும். விழுப்புரம், நாகை , திருச்சி, சென்னை உட்பட தமிழகத்தின் 18 மாவட்டங்களில் தீவிர அனல் காற்று வீசும். ஆகையால் மக்கள் குறிப்பாக பகல் 12 முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும், பள்ளிகளில் வகுப்புகளை திறந்த வெளியில் நடத்துவதை தவிர்க்க வேண்டும். ” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி, அனல் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள 18 மாவட்ட ஆட்சியர்களுக்கு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க