• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடவுச்சீட்டில் பெயரை மாற்ற வேண்டாம் – நரேந்திர மோடி

April 14, 2017 தண்டோரா குழு

திருமணத்துக்கு பிறகு இந்திய கடவுச்சீட்டில் பெண்கள் தங்களது பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

மும்பையில் உள்ள இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் மகளிர் பிரிவு கூட்டம் வியாழக்கிழமை(ஏப்ரல் 13) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அவர் பேசியதாவது;

“இந்தியாவில் பெண்கள் திருமணத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கடவுச்சீட்டில் (பாஸ்போர்ட்டில்) தங்களது தந்தையின் பெயரை இணைத்து பயன்படுத்தி வந்தனர். இதனால் திருமணத்துக்கு பிறகு, அவர்கள் கடவுச்சீட்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டிய சுழல் இருந்தது.

இதன் காரணமாக பெண்கள் பெரும் சீரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சீரமத்தை போக்கும் வகையில் இனி திருமணத்துக்கு பிறகும், அதே பெயரை பெண்கள் கடவுச் சீட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம், மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்தில், மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்து வளர்ச்சி திட்டங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

அதற்கு உதராணமாக, பெண்களுக்கு பேறு கால விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையிலிருந்து குழந்தை பெறும் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது,” என்றார் மோடி.

மேலும் படிக்க