• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

31-வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் ; இன்று குட்டிக் கரணம் போட்டு போராட்டம்

April 13, 2017 தண்டோரா குழு

தில்லியில் 31-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் இன்று குட்டிக் கரணம் போட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளிடம் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,தமிழக அரசு கோரிய வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்,காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், தென்னக நதிகள் இணைப்புக்கு உடனே நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடியிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். தினமும் பல விதமான போராட்டங்களை நடத்தி வரும் அவர்கள் இன்று தில்லியில் விவசாயிகள் குட்டிக் கரணம் போட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தில்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதிலும் இருந்து விவசாயிகள்,மாணவர்கள், மக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் மாணவர்கள்,மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க