• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகள் அனாதை இல்லை என்பதை இளைஞர்கள் உணர்த்தியுள்ளனர் – அய்யாகண்ணு

April 13, 2017 தண்டோரா குழு

தமிழக விவசாயிகள் அனாதை இல்லை என்பதை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உணர்த்தியுள்ளனர் என தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு கூறியுள்ளார்.

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்,வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் தில்லியில் 3௦ நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் மாணவர்கள்,இளைஞர்கள் என பலரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“ தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் அனாதைகள் இல்லை என்று சென்னையில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் மூலம் நிரூபித்து விட்டனர்.

மாணவர்கள், இளைஞர்கள், மக்கள் என அனைவரும் விவசாயிகளுக்காக உரிமைக் குரல், போர் குரல் கொடுத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் மூலம் நாங்கள் இன்னும் தீவிரமாக போராட வேண்டும் என்ற உத்வேகம் கிடைத்துள்ளது.

மாணவர்களின் போராட்டம் எங்களுக்கு மிகுந்த ஆறுதலை தருகிறது. எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்,” என்றார் அய்யாகண்ணு.

மேலும் படிக்க