• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்யும் முறை மே 1 முதல் அமல்

April 12, 2017 தண்டோரா குழு

பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்யும் முறை மே 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்தியாவில் தற்போது பெட்ரோல் – டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதாவது தங்கம் விலை நிர்ணயிக்கப்படுவது போல் பெட்ரோல், டீசல் விலையையும் நிர்ணயிக்க பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதையடுத்து சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மே 1-ம் தேதி முதல் பரிசோதனை அடிப்படையில் 5 நகரங்களில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலையை மாற்றியமைக்க உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள்அறிவித்துள்ளன. அதன் பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

அதன்படி புதுச்சேரி, சண்டிகர், ஜம்ஷெட்பூர், விசாகப்பட்டினம், உதய்பூர் ஆகிய நகரங்களில் மே 1 முதல் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்யும் முறை அமலாகிறது.
தற்போது, 15 நாட்களுக்கு ஒரு முறை, இவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், விலை மாற்றி அமைக்கப்படுகிறது.

மேலும், எண்ணெய் நிறுவனங்களின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்,”இந்த முடிவில் மத்திய அரசு தலையிட முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க