• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரிய பொதுமக்கள் மீது தடியடி !

April 11, 2017 தண்டோரா குழு

திருப்பூர் சாமாளபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஐந்து மணி நேரத்திற்கும் மேல், போராட்டம் நடத்திய பெண்களை போலீசார் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் நெடுஞ்சாலை ஓரம் டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி வருகிறது. இதனை மூட கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் டாஸ்மாக் கடை மூடப்படும் என வாய்மொழியாக உத்திரவாதம் அளித்தனர். எனினும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் அந்த வழியாக சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் வந்துள்ளார். அவரை வழிமறித்த பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு வழி செய்ய வேண்டும் என்று அவரை சிறை பிடித்தனர்.இதன் காரணமாக வேறுவழியின்றி அவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், போராட்டக்காரர்களை கலைந்து போகக் கூறி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த அதிரடி படை போலீசார், அங்கிருந்த பொது மக்களை கண் மூடித்தனமாக தாக்கினர்.

அப்போது போலீசார் ஒருவர் வயதான பெண்மணியின் கன்னத்தில் ஓங்கி பளார் என நடு ரோட்டில் அடித்தார் . அதனை தொடர்ந்து, பலரது மண்டை உடையும் அளவுக்கு போலீசார் கண் மூடித்தனமாக தாக்கினர்.

போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இச்சம்பவத்தை படம் பிடித்த பத்திரிக்கையாளர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, போலீசாரின் தடியடி சம்பவத்தை கண்டித்து, பொதுமக்களும் போலீசார் மீது கற்களை வீசினர். ஜனநாயக முறையில் போராடும் தங்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது எனக் கூறினர். டாஸ்மாக் கடை மூடப்படும் என அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக கேட்டதாகவும், ஆனால் அவர்கள் தரவில்லை என்றும் பொதுமக்கள் கூறினர்.

மேலும் படிக்க