• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரள பள்ளிகளில் மலையாள மொழி கட்டாயம்

April 11, 2017 தண்டோரா குழு

கேரள பள்ளிகளில் மலையாள மொழி கட்டாயம் கற்பிக்கப்படுவதற்கான அவசர சட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் சதாசிவம் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

கேரளாவில் உள்ள சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மலையாளம் கற்றுத்தராதது தொடர்பாக அரசுக்கு புகார்கள் வந்தன.இதனையடுத்து கேரள மாநிலத்தில் நடைப்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில்,தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளார்.

மேலும் இதனை மீறும் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்த சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க