• Download mobile app
01 Aug 2025, FridayEdition - 3460
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மா.பா பாண்டியராஜனை கைது செய்ய காவல்துறையினர் தீவிரம்

April 10, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகரில் பிரச்சாரத்தின் போது தேசியக் கொடியை அவமதித்த வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் மா.பா பாண்டியராஜனை கைது செய்ய காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறவிருந்த சூழ்நிலையில் கடந்த 6-ம் தேதி, அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா (ஒ.பி.எஸ் அணி)அணியின் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, ஆர்.கே.நகரில் முன்னாள் அமைச்சர் மா.பா பாண்டியராஜன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஜெயலலிதாவின் சடலம், சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருப்பது போன்ற பொம்மையை வைத்து அவர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். சவப்பெட்டி பொம்மை மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது போல அது வடிவமைக்கப்பட்டிருந்தது.

இது தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் என ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனால் மா.பா. பாண்டியரஜானை கைது செய்யும் முயற்சியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் பெறும் முயற்சியில் பாண்டியராஜன் இறங்கியுள்ளதாகவும் அக்கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க