• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவாரா ?

April 10, 2017 தண்டோரா குழு

வருமானவரித் துறையினரால் சோதனை செய்த விவகாரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அ.தி.மு.க.,வின் முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகினர்.

சென்னை ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா நடைபெற்ற புகாரை அடுத்து ஏப்ரல் 7-ம் தேதி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் , எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, அ.தி.மு.க முன்னாள் எம்.பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோரின் வீடுகள் உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பல ஆவணங்கள், முறைகேடாக பணபரிமாற்றம் செய்யப்பட்டதிற்கான ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை வருமானவரித் துறையினர் கைப்பற்றினார்கள் என தகவல் வெளியானது. இதனையடுத்து விஜயபாஸ்கர், சரத்குமார், கீதாலட்சுமி, சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் இன்று (ஏப்ரல் 10) சென்னை, நுங்கபாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர்.

ஆஜரான அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடைபெற்று வரும் இந்த விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவரிடம் இருந்து கைப்பற்றபட்ட ஆவணங்களை வைத்து அவரை கைது செய்ய முடியாது என சட்ட வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க