• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எடுத்துச் செல்ல இங்கு எதுவும் இல்லை எனக்கு ஏதாவது கொடுத்துச் சென்றால் நலம் – சரத்குமார்

April 7, 2017 தண்டோரா குழு

எடுத்துச்செல்ல இங்கு எதுவும் இல்லை எனக்கு ஏதாவது கொடுத்துச் சென்றால் நலம் என கிண்டலாகக் கூறினார், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,நடிகர் சரத்குமார் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். இதையடுத்து சரத்குமார் வீட்டில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள், சரத்குமார் வீட்டின் முன் குவிந்துள்ளனர். அவர்களை சரத்குமார் சமாதானப்படுத்தினார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார்,

“காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். அவர்களுக்கு நான், முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். எனினும் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் சோதனை மேற்கொள்கின்றனர் என்று தெரியவில்லை. ஆர்.கே.நகரில் இன்று முதல் நான் பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன். எனவே, எனது பிரசாரப் பயணத்தைத் தடுக்கவே வருமான வரித்துறையினரின் இந்த சோதனை நடைபெறுவதாக நான் நினைக்கிறேன். என்றார். மேலும் என் வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. அவர்கள் எடுத்துச் செல்ல இங்கு எதுவும் இல்லை. அவர்கள் எனக்கு ஏதாவது கொடுத்துச் சென்றால் நலம்” என்று கூறினார்.

மேலும் படிக்க