• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜியோவிற்கு செக் வைத்த டிராய்

April 6, 2017 தண்டோரா குழு

ஜியோ பிரைம் திட்டத்தின் கீழ் அளிக்கபட்ட இலவச சேவையை உடனடியாக நிறுத்துமாறு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு டிராய் உத்தர விட்டுள்ளது.

கடந்த மார்ச் 31ம் தேதியுடன் ஜியோ வாடிக்கையாளர்களின் இலவச சேவை முடிந்தது. ஆனால் ஜியோ நிறுவனம் சம்மர் சப்ரைஸ் என்ற புதிய ஆபரை அதன் வாடிக்கையாளர்களுக்கு அளித்தது.

இந்த ஆபரை பயன்படுத்தி பிரைம் வாடிக்கையாளர்கள் 303 ரூபாய் செலுத்தி மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவையை பெறலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், ட்ராய் ஜியோவின் சப்ரைஸ் பேக் ஆபரை உடனே கைவிடுமாறு கூறியுள்ளது.

இதையடுத்து, 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 3மாதம் இலவச அழைப்பு, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி இணைய வசதி கொண்ட அறிவிப்பை திரும்ப பெற்றது ஜியோ நிறுவனம்.

மேலும் படிக்க