• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜியோவிற்கு செக் வைத்த டிராய்

April 6, 2017 தண்டோரா குழு

ஜியோ பிரைம் திட்டத்தின் கீழ் அளிக்கபட்ட இலவச சேவையை உடனடியாக நிறுத்துமாறு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு டிராய் உத்தர விட்டுள்ளது.

கடந்த மார்ச் 31ம் தேதியுடன் ஜியோ வாடிக்கையாளர்களின் இலவச சேவை முடிந்தது. ஆனால் ஜியோ நிறுவனம் சம்மர் சப்ரைஸ் என்ற புதிய ஆபரை அதன் வாடிக்கையாளர்களுக்கு அளித்தது.

இந்த ஆபரை பயன்படுத்தி பிரைம் வாடிக்கையாளர்கள் 303 ரூபாய் செலுத்தி மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவையை பெறலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், ட்ராய் ஜியோவின் சப்ரைஸ் பேக் ஆபரை உடனே கைவிடுமாறு கூறியுள்ளது.

இதையடுத்து, 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 3மாதம் இலவச அழைப்பு, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி இணைய வசதி கொண்ட அறிவிப்பை திரும்ப பெற்றது ஜியோ நிறுவனம்.

மேலும் படிக்க