• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோடையில் கோவையில் ஆலங்கட்டி மழை

April 6, 2017 தண்டோரா குழு

கோவையில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள்,விவசாயிகள் நோயாளிகள் என பல்வேறு தரப்பினரும் வெப்பம் தாங்காமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று(ஏப்ரல் 6) இரவு சுமார் 7 மணியளவில் பலத்த இடி சத்தத்துடன் கோவை அருகே உள்ள சரவணம்பட்டி,சேரன் நகர்,கவுண்டன்பாளையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை,டவுன்ஹால்,இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தன.

இதில் ஒரு சில இடங்களில் வேகமான காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக மாறியது. கோடை காலத்தில் பெய்த இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த மழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே தற்போது நிலவி வரும் குடிநீர் பிரச்னை தீரும் எனவும் அடுத்த போக விவசாயம் செய்ய மழை அதிக இன்னும் அளவில் பெய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க