• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனைவி அடிக்கடி தாலியை கழட்டி வைக்கிறாள் விவாகரத்து கேட்ட கணவர்

April 6, 2017 தண்டோரா குழு

தன் மனைவி அடிக்கடி தாலியை கழட்டி வைப்பதால் விவாகரத்து கோரி கணவர் தாக்கல் செய்த மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தன் மனைவியை விவாகரத்து செய்வதாக கோரி மனு தாக்கல் செய்தார். அம்மனுவில், தன்னுடைய மனைவி அடிக்கடி தாலியை கழட்டி வைப்பதாகவும், குங்குமம் வைத்துக்கொள்ள மறுப்பதோடு தலையில் முந்தானையைக் கொண்டு மூட மறுக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். ஆகையால், மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை எனவும் இதனால் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இவ்வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வசந்தி நாயக் மற்றும் தேஷ்பாண்டே ஆகியோர் விசாரித்தனர். அப்போது, இதுபோன்ற கலாச்சார ரீதியான வழக்கத்தை பெண்கள் பின்பற்ற வேண்டும் என்று நிர்பந்திக்கக்கூடாது. தாலி கட்டிக்கொள்வதும், குங்குமம் வைத்துக்கொள்வதும், முந்தானையை வைத்து தலையை மூடுவதெல்லாம் பெண்களின் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது.21-ம் நூற்றாண்டில் இதுபோன்ற பிரச்சனைகளுக்கெல்லாம் விவாகரத்து கேட்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், இந்திய சட்டப்படி கலாச்சார ரீதியான சடங்குகளை பின்பற்ற, யாரும் யாரையும் நிர்பந்திக்கூடாது எனவும் நீதிபதிகள் மேற்கோள் காட்டினர்.

மேலும் படிக்க