• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

80விநாடியில் டோன்ட் கேக்கை சாப்பிட முயன்றவர் மரணம்

April 6, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் தலைநகரான டென்வரில் ஒரு கிலோ எடை கொண்ட, டோனட் கேக்கை 80 விநாடியில் சாப்பிட முயன்றவர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் தலைநகரானடென்வர் நகரின் தோர்ன்டன் பகுதியை சேர்ந்தவர் ட்ராவிஸ் மலூப் (42). இவர் கடந்த ஏப்ரல் 2ம் தேதி வூடு டோனட்ஸ் கடை நடத்திய டோனட் என்னும் கேக் வகையை உண்ணும் போட்டியில் கலந்து கொண்டார். அந்த போட்டியில் கலந்துக்கொண்ட ட்ராவிஸ், 80 வினாடிகளில் டோன்ட் கேக்கை சாப்பிட முயன்றபோது மூச்சு திணறி உயிரிழந்தார்.

“தொண்டையிலுள்ள காற்று குழாயில் உணவு சிக்கி கொண்டதன் விளைவாக மூச்சு திணறல் ஏற்பாட்டு ட்ராவிஸ் உயிரிழந்தார்” என்று பிரேத பரிசோதனை செய்த அதிகாரி தெரிவித்தார்.வூடு டோன்ட்ஸ் கடை வரிசையில் நின்றுக்கொண்டிருந்த ஜூலியா ஏடேல்ஸ்டீன் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:3௦ மணியளவில் ட்ராவிஸ் டோனட்டை உண்ண முயற்சி செய்துக்கொண்டிருந்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டது. அவருக்கு பலர் உதவி செய்தனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்” என்றார்.

மேலும் படிக்க