• Download mobile app
02 Jul 2025, WednesdayEdition - 3430
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகர காவல் துறையினரின் குழந்தைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

April 6, 2017 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியம் காவல்துறையினரின் குழந்தைகளில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு படிப்பை படித்து முடித்துவிட்டு மேல்படிப்பிற்காக காத்திருப்பவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்,எங்கு படிக்கலாம் என்பது குறித்த விழிப்புணர்வு நிகிழ்ச்சி கோவை பி.எஸ்.ஜி கல்லூரி அரங்கில் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 277 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எதில் விருப்பம் உள்ளது, அதில் அவர்களின் திறமை எவ்வாறு உள்ளது என்பனவற்றை அறிந்து அவர்களுக்கான ஆலோசனை வழங்கப்பட்டது. இன்றும் நாளையும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் லட்சுமி தொடங்கி வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். பி.எஸ்.ஜி கல்லூரி முதல்வர் கிரிராஜ் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

மேலும் படிக்க