• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தம் ; பயணிகள் கடும் அவதி

April 6, 2017 தண்டோரா குழு

கேரளாவில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கோவையிலிருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஜிஷ்ணு பினராய் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகம் தான் காரணம் எனக் கூறி எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி , கேரளா மாநிலம் டி.ஜி.பி அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதனைக் கண்டித்து கேரளா முழுவதும் எதிர் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.

இதனால் கோவை உக்கடம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும், பேருந்துகள் கேரளா தமிழக எல்லையான வாளையார் பகுதியிலேயே நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக கேரளாவிற்கு செல்ல இருந்த பொதுமக்கள் பேருந்துகள் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

தீடீரென முழு அடைப்பு நடைபெற்றதால், இது குறித்து அறியாத பொதுமக்கள் பலரும் பேருந்து நிலையத்திலேயே காத்துக் கிடக்கின்றனர். பொதுமக்கள் அவதிக்குள்ளாவதை தடுக்க கேரளா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க